இந்து மதத்தில் குங்குமம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. எனவே, திருமணமான ஒவ்வொரு பெண்களும் தங்கள் நெற்றியில் குங்குமத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அப்படி வைப்பதினால் அது கணவனுக்கு நீண்ட ஆயுளையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால், பல பெண்கள் அதை வைக்கும் போது சில தவறுகளை செய்கிறார்கள். குறிப்பாக அதை எந்த விரலால் வைக்க வேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் அவர்கள் சிரமங்களை சந்திப்பார்கள். சரி.. நெற்றியில் குங்குமம் வைப்பதற்கான சில விதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.. அவை..
பார்வதியை நினையுங்கள்: திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் முன் பார்வதி தேவியிடம் நற்கதி தருமாறு கேட்டு வணங்க வேண்டும். இப்படி செய்தால், உங்கள் கணவரின் ஆயுள் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.
இந்த தவறை செய்யாதீங்க: நெற்றியில் குங்குமம் வைக்கும் போது கீழே சிந்தினாள் அதை மீண்டும் நெற்றியில் ஒருபோதும் வைக்க கூடாது. அப்படி வைத்தால், கணவனின் ஆயுள் குறையும் என்பது நம்பிக்கை எனவே இதை செய்யாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D