Ninaithen Vanthaai: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published May 6, 2024, 7:12 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அஞ்சலி சுடரை பார்த்து அம்மா என்று அழைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, அஞ்சலி சுடருடனே இருக்க அங்கு வரும் மனோகரி சுடர் கிட்ட பேசாத என்று திட்டி இழுத்து செல்ல, அஞ்சலி சுடர் போகாத போகாத என்று அழ பொங்கி எழும் சுடர் நான் அஞ்சலிக்காக தான் இந்த வீட்டில் இருக்கேன், அஞ்சலிக்கு ஒன்னுனா அந்த பழி என் மேல தான் வந்து விழும், அவ என்கூட தான் இருப்பா, அவளை என்கிட்ட இருந்து பிரிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று ஷாக் கொடுக்கிறாள்.

இதனையடுத்து மனோகரி வேலுக்கு போனை போட்டு சீக்கிரம் இந்த சுடரை இங்க இருந்து கூட்டிட்டு போற வேலையை பாரு இல்லனா சுடர் உனக்கு கிடைக்க மாட்டா, எழில் எனக்கு கிடைக்க மாட்டான் என்று சொல்கிறாள். எழில் ஹாஸ்பிடல் கிளம்ப செல்வியை கூப்பிட அவள் வராத நிலையில் சுடர் அவனுக்காக வேலை செய்ய எழில் அதை அவாய்ட் செய்கிறான். 

Anjali Photos: கண்ணாடி போல் இருக்கும் சேலையில்.. ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் மாறிய அஞ்சலி! ஹாட் போட்டோஸ்!

ஒருகட்டத்தில் சுடர் உங்களுக்கு என்ன தான் கோபம், அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் என்று வழிமறித்து கேள்வி கேட்க எழில் அவளை திட்டி விட்டு கிளம்பி செல்கிறான். அடுத்து சுடர் சோகமாக உட்கார்ந்திருக்க அவருடைய அப்பா போன் செய்ய சுடர் எப்படி பா இருக்கீங்க என்று கேட்,க நீ இருக்க வீட்டு வாசலில் தான் இருக்கேன் என்று சொன்னதும் சுடர் கீழே ஓட இதை பார்த்து மனோகரியும் பின்னாடியே செல்கிறாள். 

சுடர் அப்பாவை பிடித்து அழுது எங்கப்பா தங்கி இருக்கீங்க என்று கேட்க தங்க இடம் இல்ல மா, இங்க தங்கிக்கவா என்று கேட்கிறார். சுடர் இங்க ஒரு பிரச்சனையாகி நானே இப்ப தான் பா உள்ளே வந்திருக்கேன், அதனால் தங்க முடியாது என்று சொல்ல மனோகரி வேலுக்கு போன் போட்டு சுடரை பார்க்க யாரோ வந்ததாக சொல்ல அவன் அங்க அடையாளங்களை கேட்டு அது சுடரின் அப்பா சுப்பிரமணி என்பதை உறுதி செய்து கொண்டு கோபமாக கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Bayilvan Ranganathan: நாக்கு அழிகிடும்.. பயில்வான் மகள் ஒரு லெஸ்பியனா? காதல் பற்றி கூறி ஷாக் கொடுத்த ஷகிலா!

click me!