தமிழில் அரவாண், அய்யனார், ஈரம், மரகத நாணயம் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆதி. இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த ஜோடியின் திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் நடிகை நிக்கி கல்ராணி படங்களில் நடிக்காவிட்டாலும், ஆதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சப்தம் படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ஆதி தன்னுடைய காதல் மனைவி நிக்கி கல்ராணி உடன் ஜாலியாக சுற்றுலா சென்றிருக்கிறார். தாய்லாந்துக்கு சென்றுள்ள அவர்கள் இருவரும் அங்குள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றிப்பார்த்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.