இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? காசுக்காக நடிகை நயன்தாரா செஞ்ச வேலைய பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

First Published Mar 8, 2024, 3:07 PM IST

நடிகை நயன்தாரா, தான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சோகப் பதிவிற்கான உண்மை காரணம் தற்போது தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Nayanthara

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சினிமா மட்டுமின்றி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். படங்கள் தயாரிப்பதற்காக ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து நடத்தி வரும் நயன், அந்நிறுவனம் மூலம் பல்வேறு இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அந்நிறுவனம் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்தும் வருகிறார்.

Ladysuperstar Nayanthara

இதுதவிர, லிப் பாம் என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் விதவிதமான லிப் ஸ்டிக்குகளை விற்பனை செய்து வருகிறார் நயன். அந்நிறுவனத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்வதற்காக 9ஸ்கின் என்கிற நிறுவனத்தை கடந்தாண்டு தொடங்கினார். சரும பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில் பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் தயாரித்து அதை விற்பனையும் செய்து வருகிறார். 

இதையும் படியுங்கள்... Nayanthara Photo: தூரமாக செல்கிறோம்... குழந்தைகளுடன் நயன் - விக்கி பகிர்ந்த புகைப்படம்! இதில் கூட இடைவெளியா?

Nayanthara Latest look

மேலும் பெண்களுக்கு தேவையான சானிட்டரி நேப்கின் தயாரிக்கும் பெமி9 நிறுவனத்தையும் நடத்தி வரும் நயன்தாரா, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்கி வரும் டிவைன் புட்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வைத்துள்ள நயன்தாரா, பல்வேறு பிராண்டுகளுக்கு அம்பாசிடராகவும் திகழ்ந்து வருகிறார்.

Nayanthara Cryptic Post

அந்த வகையில் அண்மையில், மேங்கோ ஜூஸ் நிறுவனமான ஸ்லைஸின் விளம்பர தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு பல கோடி சம்பளமும் வழங்கப்பட்டு உள்ளது. இதைப்பிரபலப்படுத்தும் விதமாக தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் தொலைந்துவிட்டேன் என சோகமான பதிவை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த சிலர் விக்னேஷ் சிவன் உடன் சண்டையிட்டதால் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக எண்ணி வைரலாக்கினர்.

Nayanthara Slice ad

ஆனால் தற்போது அந்த பதிவிற்கான விடை கிடைத்திருக்கிறது. அவர் விளம்பரத்திற்காக தான் அந்த பதிவை போட்டிருக்கிறார். அதன்படி ஸ்லைஸ் நிறுவனத்திற்காக தான் நடித்த விளம்பரத்தை பதிவிட்டு மாம்பழ சுவையில் தான் தொலைந்துவிட்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் காசுக்காக தான் இவ்ளோ பில்டப் கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... அன்று கள்ளிபால குடுத்து வீசுனீங்க; இன்று கற்பழிச்சி வீசுரீங்க! எதிர்த்தா தே* பட்டம் தேடிவரும்- குமுறிய பிரபலம்

click me!