Nayanthara
கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் இணைந்தது. திருமணத்துக்கு பின்னர் விக்கி - நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர்.
Nayanthara son
அதன்படி, நடிகை நயன்தாரா, சென்னை எழும்பூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தபோது, அங்கு தன் மகன்களுடன் விளையாடுவதற்காக கீழே அழைத்து வருவாராம். அப்படி ஒரு முறை அழைத்து வந்தபோது, அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர் சவாரிக்காக வந்திருக்கிறார். அப்போது குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஏன் இவ்வளவு ஸ்பீடா வர்றீங்க என கேட்டு சண்டை போட்டுள்ளாராம் நடிகை நயன்தாரா.
Nayanthara twin babies
அதுமட்டுமின்றி ஒரு முறை உணவு டெலிவரி செய்யவந்த நபர் ஒருவர் தான் டெலிவரி செய்ய வந்த நபரிடம் போனில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தாராம். அவரிடமும் ஏன் இப்படி சத்தமா பேசுறீங்க குழந்தைகளுக்கு டிஸ்டர்ப் ஆகும்லனு சண்டை போட்டதாக அந்தணன் கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் தாய் பாசத்துல நயன்தாரா இப்படியெல்லாம் செய்கிறாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என எதிர்மறை கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.