திரையுலகில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும், அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடுவது இல்லை. அப்படி தான், பல சவால்களை கடந்து தமிழ் சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர் பிரவீன் குமார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலம் குன்றியதன் காரணமாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதை தொடர்ந்து நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணமடைந்தார். ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்த எந்தகவலும் வெளியாகவில்லை.