dhanush new movie
மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த, கதிரேசன் - மீனாட்சி தம்பதி சிறு வயதில் காணாமல் போன தங்களின் மகன் கலைச்செல்வன்தான் தான் நடிகர் தனுஷ் என்றும், அவரை கஸ்தூரி ராஜா வளர்த்து இப்போது நடிகராக்கிவிட்டார் என கடந்த 2016-ஆம் ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தனுஷ் தங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இடியாப்ப சிக்கலாகி கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு விடாப்பிடியாக நடந்து வந்த நிலையில், மீனாட்சி - கதிரேசன் தம்பதி தனுஷின் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளதால் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென... மீண்டும் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனு தள்ளுபடி செய்யபட்டது. இதை எதிர்த்து கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்.