அட்ரா சக்க... இது தான் விஷயமா? கொண்டாட்டத்தின் உச்சத்தில் மாரி சீரியல் குழுவினர்.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து

First Published Apr 9, 2024, 5:58 PM IST

மாரி சீரியல் தற்போது புதிய மையில் கல்லை எட்டியுள்ள நிலையில், சீரியல் குழுவினர் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர் மாரி. இந்த தொடரில் ஆஷிகா படுகோன் மாரி என்கிற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக ஆதர்ஷ், சூர்யா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனா, மீரா கிருஷ்ணா, ஷப்னம், தீபா நேத்ரன், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் நாயகியான மாரி ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரால் ஆவிகளை பார்க்கவும், ஆவிகளிடம் பேசவும் முடியும். அதேபோல் எதிர்காலத்தில் நடக்க உள்ள விஷயங்களையும் பார்க்க முடியும். இவரை மையமாக வைத்தேன் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், இரண்டு வருடங்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிவருகிறது.

இந்த சீரியலை ரத்னம் வாசுதேவ் என்பவர் இயக்கி வருகிறார். மாரிக்கு எதிராகவும், அவரை அழிக்கவும் பல தடைகள் வந்த போதிலும் அவை அனைத்தையும் தெய்வ சக்தி மூலம் முறியடிக்கிறார். குறிப்பாக அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை நல்லபடியாக மாரி பெற்றெடுக்க கூடாது என சதி திட்டம் போட்ட நிலையில், அவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக அம்மனே மாரிக்க பிரசவம் பார்த்த காட்சிகள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

தற்போது இந்த சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் படு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!