தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கடந்த 2015-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'நானும் ரௌடி' தான் படத்தில் நடிக்கும் போது, விக்கியை காதலிக்க துவங்கினார். 6 வருடங்களுக்கு மேல் பிரேக் அப் ஆகாமல் தொடர்ந்த, இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் பச்சை கொடி காட்டியதை அடுத்து, 2022-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் சென்னை ERC, மகாபாலி புறத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. விக்கி - நயன் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த நான்கே மாதத்தில், இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா... ஒருபுறம் தன்னுடைய திரையுலக பணிகளில் பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம், குழந்தை, கணவர், குடும்பம் ஆகியவற்றை பொறுப்பாக பார்த்து கொள்ளும் குடும்ப தலைவியாகவும் இருந்து வருகிறார்.