Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பாடி முடித்த தீபாவை கார்த்திக் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் எனக்கு தெரிந்ததும் பார்த்தது அறிந்து ஓடி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தீபாவை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக்கு எல்லோரிடமும் தர்ம லிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்து உள்ள விஷயத்தை சொல்கிறார்.
Zee Tamil Karthigai deepam serial
இதுக்கு காரணம் நம்ம வீடும் தான் என்று சொல்ல எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். ராஜேஸ்வரி தான் பேப்பரில் தீபா பற்றி தப்பான செய்தியை போட சொன்னது என்று சொல்வது மட்டுமல்லாமல் அவங்க தான் சீர்வரிசை கேட்டு தர்மலிங்க மாமாவ அவமானப்படுத்தினாங்க அதனாலதான் அவர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் சீர் செய்துள்ளார் என்ற உண்மையை உடைக்கிறார்.
இதையும் படியுங்கள்... இந்த வருஷமும் ஆஸ்கர் மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கிடைத்த ராஜமரியாதை - இதை கவனிச்சிங்களா?
Karthigai deepam serial Update
இதையெல்லாம் கேட்ட ராஜேஸ்வரி அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் என கேட்பதோடு எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க ஆதாரம் இல்லாம பேசாதீங்க என்று கேட்க செய்தி போடச் சொன்னது நீங்க தானே நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறான்.
இதையடுத்து கார்த்திக் என்ன செய்யப் போறான் என ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா குழப்பத்தில் இருக்க, கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவி வீட்டுக்கு வருகிறான். அங்கு வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி நீங்க வந்து உண்மையை சொல்லணும் என்று கூப்பிட ரவி எனக்கு எதுவும் பிரச்சனை வராதா என்று பயப்படுகிறான்.