கார்த்திகை தீபம் சீரியல் : ஆனந்துக்கு 2-வது கல்யாணம் ஆன மேட்டர்.. மீனாட்சி பெற்றோரின் காதுக்கு சென்றது எப்படி?

First Published Apr 28, 2024, 3:32 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோட்டில் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரியா, மீனாட்சி அப்பா அம்மாவை அபிராமியுடன் பிரச்சனை செய்ய வைக்கலாம் என்று பிளான் போட்டு அவர்களுக்கு போன் போட்டு ஆனந்துக்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள். 

Zee Tamil Karthigai deepam serial

பிறகு மீனாட்சி அப்பா அம்மா வீட்டுக்கு வந்து எங்களை இப்படி பண்ணலாமா உங்கள நம்பி தானே எங்க பொண்ணு அனுப்பினோம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, தீபாவும் மைதிலியும் இதெல்லாம் ஐஸ்வர்யா மற்றும் ரியாவின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்கின்றனர். இதனால் ரியாவை இழுத்து சென்று வெளியே வராதபடி ஒரு ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். பிறகு மீனாட்சி தன்னுடைய அம்மாவிடம் என்ன சொல்லாமல் வந்து இருக்கீங்க என்று கேட்கிறாள். எந்த பிரச்சினையும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என்று சமாளிக்கிறாள். 

இதையும் படியுங்கள்... இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்சுக்கு நாள் குறித்த இயக்குனர் ஷங்கர்... எங்க நடக்கப்போகுது தெரியுமா?

Karthigai deepam serial Update

அபிராமியும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏதாவது பிரச்சனை நானே சொல்லி இருப்பேன் என்று கூறுகிறார். இதையடுத்து மீனாட்சி நீங்க நம்பலனா ஆனந்த் கிட்ட கூட பேசி பாருங்க என்று போன் போட்டு என்னங்க அப்பா வந்து இருக்காங்க நமக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லுங்க என்று போனை கொடுக்க, ஆனந்தும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல, மீனாட்சியின் அப்பா அம்மா நிம்மதி அடைகின்றனர். அதன் பிறகு அவர்கள் கிளம்பிச் செல்ல, மீண்டும் மீனாட்சி ஆனந்துக்கு போன் போட்டு இந்த குடும்பத்தோட மானம் போகக்கூடாது என்று தான் உங்களுக்கு போன் பண்ணி பேச சொன்னேன். இத நீங்க அட்வான்டேஜா எடுத்துக்காதீங்க என்று சொல்லி திட்டி போனை வைக்கிறார். 

Karthigai deepam serial Today Episode

அதன் பிறகு ரியாவை திறந்து விட, ஐஸ்வர்யா இந்த நேரம் பார்த்து எங்க போன என்று கோபப்பட நடந்ததை சொல்கிறாள். கார்த்திக் வீட்டுக்கு வர டயர்டாக இருக்கும் அவனிடம் மசாஜ் செய்து விடவா என்று கேட்க, அவன் வேண்டாம் என்று சொல்ல, தீபா வருத்தப்பட, கார்த்திக் கையைப் பிடித்து இழுத்து ரொமான்ஸ் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Anirudh : பாடல்களே இல்லாமல் ஒரு படம்.. BGMல் மிரட்ட வருகின்றார் "ராக் ஸ்டார்" - படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

click me!