Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மில்லில் மிஷின் ஓடாதது அறிந்து அவனே சரி செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் மிஷினை சரி செய்ததும், ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு நீ தான் மிஷினை ரெடி பண்ணியா என்று கேட்க, அவன் இல்லை என்று சொல்ல, வெளியே வந்து பார்க்க, மேனேஜர் கார்த்திக் சார் தான் மிஷினை ரெடி பண்ணாரு என்று சொல்ல, ஆனந்த் ஷாக் ஆகிறான்.
Karthigai deepam serial Update
இதையடுத்து ரியா பூஜையறைக்குள் செல்ல, மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருக்க, ரியா மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச, அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி நீ பூஜா ரூமுக்கு வரலாம்? அந்த தாலியை தொடலாம் என்று ஆவேசப்பட்டு பேச, ரியா நான் தான் உங்க மூத்த மருமகள் என்று எதிர்த்து பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள்.
Karthigai deepam serial Today Episode
கீழே விழ இருந்த அபிராமியை தீபா தாங்கி பிடித்து அத்தை மேலே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா, இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்ல, ஆனந்துக்கு சொன்னீனா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்தா அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனலில் தோல்வியடைந்த பெண்... சூப்பர் ஹிட் சீரியல் சான்ஸ் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ