சைக்கிள் கேப்பில் அபிராமியை ஆம்புலன்ஸில் கடத்தி சென்ற ரவுடிகள்... கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

First Published Apr 8, 2024, 3:11 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் அபிராமியை கடத்த பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் அபிராமியை கடத்த பிளான் போட கார்த்திக்கும் அபிராமி இருக்கும் இடம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர, ரவுடிகள் அபிராமியை கடத்திக்கொண்டு ஆம்புலன்ஸில் கிளம்பிச் செல்ல, கார்த்திக் அதை கண்டுபிடித்து ஆம்புலன்சை பின் தொடர்ந்து செல்கிறான். வேக வேகமாக வரும் கார்த்திக் போலீஸ்க்கு போன் போட்டு தகவல் கொடுக்கிறான். 

Zee Tamil Karthigai deepam serial

இதனைத் தொடர்ந்து ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விடுகின்றனர். மேலும் கேட் அருகே இருக்கும் வாட்ச்மேனிடம் யார் வந்து கதவை திறக்க சொன்னாலும் திறக்க கூடாது உள்ள விடக்கூடாது என கண்டிஷன் போட்டு உள்ளே செல்கின்றனர். ரவுடிகளின் காரை மிஸ் பண்ண கார்த்திக் எங்க போனாங்க என்று தெரியாமல் குழம்பி இங்கும் அங்குமாக அலைந்து தேடுகிறான். ஒரு கட்டத்தில் இந்த தோப்பை பார்த்ததும் சந்தேகம் வந்து கதவை திறக்க சொல்ல வாட்ச்மேன் கதவை திறக்க முடியாது யாரும் உள்ள போகக்கூடாது என சொல்கிறார்.

இதையும் படியுங்கள்... Sai Pallavi : பாலிவுட் போனதும்... நயன்தாராவுக்கு நிகரான சம்பளம் - நடிகை சாய் பல்லவிக்கு அடித்த ஜாக்பாட்..!

Karthigai deepam serial Update

உடனே கார்த்திக் அவரிடம் சண்டை போட்டு காரை உள்ளே எடுத்துச் செல்ல, ரவுடிகள் கார்த்தியை சுற்றிவழிக்க அபிராமி இருக்கும் இடம் இதுதான் என்பதை உறுதி செய்து கொள்கிறான். ரவுடிகளிடம் கார்த்திக் சண்டையிடுகிறான். மறுபுறம் அபிராமியை ஆம்புலன்ஸில் தூக்கி வந்த மணி, ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு அபிராமியை தூக்கிட்டு வந்துட்டோம், ஆனால் கார்த்திக்கும் எங்கள பார்த்து பின் தொடர்ந்து வருகிறான் எப்ப வேணாலும் இங்க வரலாம் என்று சொல்ல, ஐஸ்வர்யா ஒன்னு பண்ணுங்க, அபிராமியை அங்கேயே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகிட்டீங்க கார்த்திக் கிட்ட மாட்டினா அவ்வளவுதான் என்று சொல்கிறாள்.

Karthigai deepam serial Today Episode

ஆனால் மணி, அபிராமி என் முகத்தைப் பார்த்து இருக்காங்க, இப்படியே விட்டா அவங்க என்ன நிச்சயம் அடையாளம் காட்டிடுவாங்க, அப்படி நான் மாட்டிக்கிட்டா நீங்களும் மாட்டிக்குவீங்க, அதனால அவங்கள கொன்னுடுறேன் என்று சொல்ல, ஐஸ்வர்யா வேண்டாம் பெரிய பிரச்சனை ஆயிடும் என்று சொல்ல, மணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ஒரு பிரச்சனையும் வராது என்று சொல்லி போனை வைக்க, ஐஸ்வர்யாவுக்கு பிபி ஏறுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Prashanth : திருமணமான ஒன்றரை மாதத்தில் நடிகர் பிரசாந்த்தை கழட்டிவிட்டு பிரிந்து சென்ற மனைவி... காரணம் என்ன?

click me!