இந்திய வீரர்களால் ஏற்பட்ட பெரும் சேதத்தை மறைக்கும் சீனா... மோதல் நடந்த இடத்தின் அதிர வைக்கும் புகைப்படங்கள்..!
First Published Jun 17, 2020, 5:09 PM ISTஎல்லையில் நடந்த சம்பவங்கள் மெல்ல வெளிவருகின்றது, கல்வான் பள்ளதாக்கில் இந்திய பகுதியில் நள்ளிரவில் ஆயுதமில்லா சீன ராணுவம் நுழைந்திருக்கின்றது.
இந்திய ராணுவம் கத்தி, கல்லுடன் வளைத்திருக்கின்றது. முதலில் சீன ராணுவத்தினரை வெளியேற சொல்லியிருக்கின்றனர். அவர்கள் வெளியேறவில்லை. மாறாக அங்கேயே மோதியிருக்கின்றனர். மிகபெரும் களபேரம் கல்வான் பக்கம் நடந்திருக்கின்றது. இந்தியா மிக கடும் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. சீன தரப்பில் 50க்கு மேற்பட்டோர் பலி என்பதுதான் நிஜம். ஆனால் சீனா வாய்திறக்கவில்லை. எங்களுக்கு சேதம் அதிகம் என்பதோடு நிறுத்தி கொண்டது.
இந்திய தரப்பில் 17 பேர் வீரமரணம் அடைந்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் சற்று தொலைவில் ரோந்தில் இருந்த இந்திய வீரர்கள் 11 பேரை காணவில்லை என்கின்றது இந்திய தரப்பு. 11 பேர் கைது செய்யபட்டார்களா இல்லை மோதல் நடந்து இறந்தார்களா என்பது சொல்லபடவில்லை. ராணுவ பாஷையில் காணாமல் போகுதல் என்பது மரணத்துக்கு சமம்.
ஆக சீன தரப்பில் 50க்கு மேற்பட்டோர் பலியாகி பெரும் சேதம் நடந்த நிலையில் இந்தியதரப்பில் சம்பவ இடத்தில் 14 பேரும், வேறு இடத்தில் எதிர்பாரா தாக்குதலில் 11 பேரும் வீரமரணத்தை தழுவ வைத்திருக்கின்றனர். ஏதோ ஒரு திட்டத்துடன் நுழைந்த சீனாவை விரட்டி அடித்திருக்கிறது இந்தியா. இது பழைய இந்தியா இல்லை என புரிந்து கொண்ட சீனா பின்வாங்கிற்று என்பது மட்டும் உண்மை. அந்த புதிய இந்தியா வடிவினை கொடுத்த வீரர்களுக்கு அஞ்சலிகள்.
ஆம் மிக பெரும் இலக்கை நோக்கி நள்ளிரவில் வந்திருக்கின்றார்கள். சுதாரித்து காத்திருந்த இந்திய ராணுவம் அடித்து விரட்டியிருக்கின்றது. அவர்கள் பக்கம் சேதம் அதிகமே. நிலைமை இன்னும் சரியாகவில்லை. சீனா இத்தோடு விடாது பாகிஸ்தான், நேபாளம் என அதன் கூட்டாளிகளை களத்தில் இறக்கலாம். பன்முனை அழுத்தம் அல்லது பிரச்சினை கொடுக்க தயாராகலாம். வட எல்லைகள் ஒரு பதற்றத்தில் வந்திருக்கும் நேரமிது.