Ethirneechal: ஈஸ்வரிக்கு எதிராக திரும்பிய மகன்! தங்கை வாழ்க்கைக்காக ஜனனி செய்யபோது என்ன? எதிர்நீச்சல் அப்டேட்!

First Published Mar 26, 2024, 4:03 PM IST

சன் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரில் இன்றைய தினம் என்ன நடக்க போகிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக தர்ஷினி கடத்தல் காட்சியால், கொஞ்சம் டல் அடித்த 'எதிர்நீச்சல்' தொடர், மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தர்ஷினியை உமையாள் மகன் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குணசேகரன் முடிவு செய்துள்ள நிலையில், ஜனனி தன்னுடைய தங்கை வாழ்க்கைக்காக, சித்தார்த்தை சந்திப்பதற்காக சக்தி - அஞ்சனாவுடன் சேர்ந்து அவனுடைய பேக்டரி அருகிலே காத்திருக்கின்றனர். 

அப்போது அந்த வழியாக வரும் சித்தார்த்திடம் உனக்காக உங்க வீட்டுக்கு வந்த எங்க எல்லாரையும் உங்க அம்மா அசிங்கப்படுத்துனாங்க. அதுக்கூட பரவாயில்லை,  உன்னையே நம்பி வந்த பொண்ணையும் இப்படி தான் நடத்துறதா என கேட்கிறார் ஜனனி. யார் எது பேசினாலும் அமைதியாகவே இருக்கும் சித்தார்த்... அஞ்சனாவிடம் வந்து எந்த சூழலிலும் உன்னை கைவிட மாட்டேன் என கூறி சத்தியம் செய்கிறார். அஞ்சனா கையை சித்தார்த் பிடித்திருக்கும் நேரம் பார்த்து அங்கு வரும் உமையாள்... சித்தார்த்தை திட்டு தன்னுடைய வண்டியில் ஏற சொல்கிறார்.

Inimel Song: லோகேஷ் கனகராஜை 'இனிமேல்' ஆல்பம் பாடலின் நான் தேர்வு செய்தது இப்படி தான்? ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

இங்கு இப்படி நடக்க, நண்பர்களுடன் வண்டியில் செல்லும் போது, அதில் ஒரு நண்பன் குடித்திருந்ததால் தர்ஷன் போலீசில் சிக்குகிறான். போலீசார் பெற்றோர் வந்தால் மட்டுமே விடமுடியும் என சொல்லி விடுகிறார்கள். பின்னர் குணசேகரனுக்கு போலீஸ் போன் போட அங்கு வந்து தன்னுடைய மகனை அழைத்து செல்கிறார் குணசேகரன்.

வீட்டிற்கு வரும் தர்ஷனிடம் ஈஸ்வரி இதுகுறித்து கேட்க, அதற்க்கு "உங்க பேச்சை கேட்டு எங்க அப்பாவை எதிர்த்து நின்றது பெரிய தப்பு. இவங்க சுயநலத்துக்காக பெத்த பிள்ளைகளை கூட கொள்ள தயங்க மாட்டாங்க என எடுத்தெறிந்து பேசுகிறார். இதனால் அங்கு இருப்பவர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைகின்றனர். மற்றொரு புறம், தன்னுடைய மகள் தர்ஷினியை சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார் குணசேகரன். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சக்தி, இதை பெரிய பிரச்சனையாக இழுத்து விட்டுவிடுவேன் என கூற, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என சவால் விடுகிறார் குணசேகரன்.

Nayanthara: உயிர் - உலகம் இருவரையும் மார்பில் சாய்த்துக்கொண்டு... தாய் பாசத்தை பொழியும் நயன்தாராவின் போட்டோஸ்!

வரும் வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் என குணசேகரன் முடிவு செய்ய, ஜனனி ஒரு பக்கம் தர்ஷினி எதிர்காலம் , மாதொரு புறம் என் தங்கச்சி அஞ்சனா வாழ்க்கை இது இரண்டையும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறி, போராட துணிகிறார். இந்த புரோமோவே அடுத்து என்ன நடக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .

click me!