தமிழ் திரை உலகில், இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தேசிங்கு பெரியசாமி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியை போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தனக்கேற்ற போல் நல்ல கதையை உருவாக்கினால் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பார் என பல பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, தனது உதவி இயக்குனர்களில் ஒருவரான முகமது இக்பால் என்பவர் மீது காவல்துறையில் புகார் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் இக்பால் முகமது, தனக்கே தெரியாமல் மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தேசிங்கு பெரியசாமி புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.