கோடை வெப்பத்தை தணிக்க வரும் மழை.. இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தரமான சம்பவம் இருக்காம்.!

First Published Apr 13, 2024, 9:00 AM IST

அடுத்த 3 மணிநேரத்தில் மயிலாடுதுறை, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rain

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

Heavy Rain

இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain: அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை இருக்காம்! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

Chennai Meteorological Department

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

click me!