தன்னுடைய தந்தை கேப்டன் விஜயகாந்தின் மறைவில் இருந்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் அவருடைய மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவருமே,மீண்டும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். விஜய பிரபாகரன் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் திரைப்படங்களில் பிஸியாகியுள்ளார்.
இதுவரை திரையில் காட்டப்படாத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்காக, தன்னுடைய தோற்றத்தை மாற்றி பல்வேறு காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சண்முக பாண்டியன். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஒரிசா, தாய்லாந்து போன்ற காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.