பிரதீப் வெளியேற்ற நடந்த சூழ்ச்சி.! தாழ்ப்பாள் மேட்டர்.. நான் குளிக்கும் போது? உண்மையை உடைத்த விச்சு!

First Published Jan 31, 2024, 3:51 PM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி, ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து நடிகை விசித்ரா கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், இந்த மாதம் முடிவடைந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்ல வேண்டும் என குண்டக்க மண்டக்க யோசிச்சு பல பிளான்களோடு விளையாடிய மாயா 3 ஆவது இடத்தை பிடித்தார்.

அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  இரண்டாவது இடத்தை மணிச்சந்திரா தக்கவைத்து கொண்டார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் குறித்து விசித்ரா நேற்று முதல்முறையாக லைவில் ரசிகர்களிடம்  பேசினார்.

அக்கா உடன் வந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தனுஷ் - கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு

அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த லைவில் பல ரசிகர்கள் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டனர். இதற்க்கு விசித்ரா பல உதாரணங்களை கூறி, பிரதீப் சிலரால் கார்னெர் செய்யப்பட்டு பிளான் பண்ணி வெளியேற்றப்பட்டார் என கூறி அதிர்ச்சியளித்தார். 
 

Pradeep Antony

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு,  பிரதீப்பிடம் பேசினீர்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு, ஆம் நான் பேசினே என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பிரதீப் மீது சுமத்தப்பட்ட டாய்லெட் தாழ்ப்பாள் குறித்த குற்றச்சாட்டு குறித்து பேசிய விசித்ரா, "ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்குள் இருக்கும் டாய்லெட்டில் தாழ்ப்பாள் கிடையாது. இதை நான் பலமுறை சொல்லி கேமரா முன் கூறி சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளேன். அவர்கள் அதை செய்யவே இல்லை. நான் பாத்ரூம் போகும்போதுதோ... அல்லது  குளிக்க செல்லும் போதோ...  அனைவரிடமும் சென்று நான் சொல்லிவிட்டு செல்லும் நிலை தான் இருந்தது என தெரிவித்துள்ளார்.

எந்திரன் படத்தில் இப்படி ஒரு மிஸ்டேக் இருக்கா? 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட ஷங்கரின் கோல்மால் வேலை
 

இது குறித்து பிரதீப் கூட சொல்லிக்கொண்டே இருப்பான். இதை ஏதோ பிளான் பண்ணி தான் லாக்கை எடுத்துட்டாங்க என்று.  இதனால் பிரச்சனை வரக்கூடும் என்றும் சொல்லி இருக்கிறான். ஆனால் இது அவனுக்கே பிரச்சனையாக வந்தது என கூறிய விசித்ரா... பிளான் பண்ணி தான் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்புவது போல் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.
 

அதேபோல் இரவு முழுவதும் பிக் பாஸ் வீட்டில் பிரதீப் தூங்காமல் இருப்பதாக சில அவன் மீது தவறான தகவல்களை முன் வைத்தனர். உண்மையில் பிரதீப்பும், நானும் தான் பிக்பாஸ் வீட்டில் சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவோம் என்று தெரிவித்தார். மாயா உள்ளிட்ட சிலரின் சூழியால் தான் பிரதீப் வெளியேற்றப்பட்டார் என விசித்ரா வெளிப்படையாக இந்த லைவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 வருடங்களாக தொடரும் நட்பு... இணையத்தை கலக்கும் மெட்டி ஒலி சிஸ்டர்ஸின் ரீ-யூனியன் போட்டோஸ்

click me!