சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீஸாபி 7 நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களின் முக்கியமானவர் பிரதீப் ஆண்டனி. மாயாவை விட செம்ம ஸ்டாட்டர்ஜியுடன் விளையாடிய இவரையே, மாயா கேங் பொய் பழி சுமாற்றி வெளியே அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நடுவராக இருந்து நடுநிலையாக பேச வேண்டிய கமல்ஹாசனும் தீர விசாரிக்காமல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கினார்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரியாக பிரதீப் ஆன்டனி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இந்நிலையில் பிரதீப் ஆண்டனி... தன்னுடைய பழைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மிகவும் உருக்கமான சில பதிவுகளை போட்டுள்ளார்.
Pradeep Antony
மேலும் இந்த பதிவுடன் சேர்த்து... சிறிய வயதில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஒரு புறம் ஆறுதல் கூறி வந்தாலும்... நீங்கள் நினைத்ததை விட அதிக பணம் சம்பாதிப்பீர்கள் நம்பிக்கையோடு இருங்கள் என கூறி வருகின்றனர்.