Vadivelu
நடிகர் வடிவேலு, சிறந்த கலைஞன் என்பது அனைவரும் அறிந்தது தான். தன்னுடைய திறமையை தானே தட்டி தட்டி மெருகேற்றி கொண்டவர். அதே போல் பல கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தாலும், அவர்களிடம் ஒரு வித அதிகாரத்தை கட்ட கூடியவர். அவரை மிஞ்சி யாரும் நன்றாக நடித்து விட கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.
Vadivelu and Vijayakanth
அதே போல் வடிவேலு... தன்னுடன் நடித்த சிறிய கலைஞர்கள் முதல் பெரிய கலைஞர்கள் வரை யாருடைய மரணங்களில் கூட கலந்து கொள்ள மாட்டார். இதனை பல முறை உண்மையாக்கி உள்ளார். குறிப்பாக வடிவேலுவுக்கு பல படங்களில் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த் இறுதி சடங்கில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில் வடிவேலு பற்றி பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கூறியுள்ளது... வடிவேலு மீது நெட்டிசன்களுக்கே கோபத்தை வரவைத்துள்ளது. வடிவேலு முன்னணி காமெடி நடிகர் என்பதால் அவருக்கு தனி கேரவன் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இவருடன் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்டுகளுக்கு கேரவன் எல்லாம் கொடுக்க மாட்டார்களாம். இவ்வளவு ஏன் தன்னுடன் நடித்த நடிகர்கள் சாப்பிடவில்லை என்பது அவருக்கு தெரிந்தாலும் அதை பற்றி அவர் கண்டு கொள்ளமாட்டாராம். ஆனால் விஜயகாந்த், போன்ற பெரிய நடிகர்கள்... போண்டாமணி, பெஞ்சமின், போன்ற சிறிய கலைஞர்களிடம் வந்து சாப்டீங்களா என கேட்டு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார்களாம்.
Sneha Photos: சேலை கட்டிய ஆரஞ்சு பழமே..! 42 வயதிலும் குறையாத கட்டழகு! அடங்காத அழகில்.. புன்னகை அரசி சினேகா!
இந்த தகவலை பெஞ்சமின் கூறி... வடிவேலு சிறந்த மனிதர் இல்லை என விமர்சித்துள்ளார். இவரது இந்த பேச்சுக்கு, வடிவேலு கோடிகளில் சம்பளம் வாங்குபவராக இருந்தும், சாப்பாட்டு விஷயத்தில் கூட இப்படி நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.