புருவங்கள் அடர்த்தியாக மாற இந்த 3 எண்ணெய் போதும்! உடனே ட்ரை பண்ணுங்க..

First Published Feb 27, 2024, 10:30 PM IST

உங்கள் புருவங்கள் கருமையாகவும் அடர்த்தியாகவும் மாற்ற இந்த 3 எண்ணெய்கள் உங்களுக்கு உதவும்..

பொதுவாக எல்லோரும் தங்கள் கண்ணுக்கு மேல் இருக்கும் புருவம் பார்ப்பதற்கு அழகாகவும், அடர்த்தியாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால், சிலருக்கு  அவை மிகவும் மெல்லியதாக இருக்கும். புருவங்கள் அடர்த்தியாக இருந்தால், பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். குறிப்பாக முகத்தின் அழகை இரட்டிப்பாக்கும் விஷயங்களில் புருவங்களும் ஒன்று. 

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இப்படித்தான் உணர்கிறார்கள். அதனால் கடைகளில் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி அழகாக்குகின்றன. சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு இது இரண்டும் பிடிக்கவே பிடிக்காது. பக்க விளைவுகள் வரும் என்ற பயம்.
 

ஆனால், சில வீட்டு வைத்தியம் மூலம் இயற்கையாகவே உங்கள் புருவங்களை கருமையாகவும் அடர்த்தியாகவும் மாற்றலாம். இப்போது புருவங்களை அடர்த்தியாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

பாதாம் எண்ணெய்: பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், இது அழகுக்கு உதவுகிறது. அதேபோல, பாதாம் எண்ணெயைக் கொண்டு ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம். புருவம் வளரவும் பாதாம் எண்ணெய் உதவுகிறது. எனவே, தினமும் தூங்கச் செல்வதற்கு முன் பாதாம் எண்ணெயை புருவத்தில் தடவி வந்தால், சில நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.
 

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய்யும் அழகை இரட்டிப்பாக்க உதவுகிறது. சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், நீரேற்றமாகவும் மாற்றுகிறது. அதேபோல், தேங்காய் எண்ணெய் முடியை வலுவாக மாற்றுவதில் சிறப்பாக செயல்படுகிறது. புருவங்கள் அடர்த்தியாகவும் கருப்பாகவும் பெற விரும்புபவர்கள், தினமும் இரவில் தூங்கும் முன் புருவங்களில் தேங்காய் எண்ணெயை தடவவும். இப்படி செய்தால் சில நாட்களிலே நல்ல மாற்றம் தெரியும்.
 

விளக்கெண்ணெய்: முடி வளர்ச்சியில் விளக்கெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், உங்கள்  புருவங்கள் அடர்த்தியாகவும் கருப்பாகவும் மாற வேண்டுமானால், தினமும் விளக்கெண்ணெயை புருவத்தில் தடவவும். இப்படி தொடர்ந்து செய்தால், நல்ல மாற்றம் வரும்.

click me!