Ninaithen Vanthaai: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி! நினைத்தேன் வந்தாய் அப்டேட் !

First Published May 8, 2024, 5:49 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரிடம் சவால் விட்ட எழில் அஞ்சலியையும் கவினையும் குளிக்க வைக்க படாதபாடு பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
 

அதாவது அஞ்சலி, கவினை குளிக்க வைத்ததை தொடர்ந்து எழில் காவியாவுக்கு தலை வாரி விட அது தப்பாக வர கண்ணாடியில் தலையை பார்த்த காவியா கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள், அதன் பிறகு எழில் அதை சரி செய்து அபிக்கு தலை வாரி விடுகிறான். பிறகு எல்லாருக்கும் ஷூ, சாக்ஸ் போட்டு விடுகிறான். 

அடுத்து எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்க அஞ்சலி ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க எழில் அவளுக்கு ஊட்டி விட விரலை பிடித்து கடித்து விடுகிறாள், இந்த நேரம் பார்த்து இங்கு வரும் மனோகரி எழில் சாப்பாடு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். நீ எதுக்கு எழில் இதெல்லாம் பன்னிட்டு இருக்க? அதுக்கு தானே சுடர் இருக்கா என்று சொல்கிறாள். 

Siragadikka Aasai: முத்துவை காப்பாற்ற பாருக்கு செல்லும் மீனா.! செம்ம ட்விஸ்ட்... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

உடனே சுடர் நான் பண்றேனு அவர் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அவன் சொன்னா நீ விட்டுடுவியா என்று கேள்வி கேட்க நீங்களும் தான் நான் எதுவும் செய்ய கூடாதுனு சொன்னீங்க என்று மடக்குகிறாள் சுடர். பிறகு எழில் நான் தான் செய்யறதா சொன்னேன் என்று மனோகரியை ஆப் ஆக்குகிறான்.
 

அடுத்து சுடரின் அப்பா சுப்பிரமணியம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது  பெண் ஒருவரை பார்க்கிறார். இதை பார்த்ததும் அவருக்கு தனது மனைவி முதல் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது, அந்த பெண்ணிடம் பேச ஓட அவர் மிஸ்ஸாகி விடுகிறார். வீட்டில் அஞ்சலி என் பிறந்த நாளை கொண்டாடவே இல்ல, அப்ப தான் எனக்கு உடம்பு முடியாமல் போய்டுச்சு என்று வருத்தப்பட சுடர் கேக்குடன் கிப்ட்டையும் கொண்டு வந்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய அஞ்சலி சுடரை கட்டி பிடித்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி!

click me!