அதாவது அஞ்சலி, கவினை குளிக்க வைத்ததை தொடர்ந்து எழில் காவியாவுக்கு தலை வாரி விட அது தப்பாக வர கண்ணாடியில் தலையை பார்த்த காவியா கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள், அதன் பிறகு எழில் அதை சரி செய்து அபிக்கு தலை வாரி விடுகிறான். பிறகு எல்லாருக்கும் ஷூ, சாக்ஸ் போட்டு விடுகிறான்.
உடனே சுடர் நான் பண்றேனு அவர் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அவன் சொன்னா நீ விட்டுடுவியா என்று கேள்வி கேட்க நீங்களும் தான் நான் எதுவும் செய்ய கூடாதுனு சொன்னீங்க என்று மடக்குகிறாள் சுடர். பிறகு எழில் நான் தான் செய்யறதா சொன்னேன் என்று மனோகரியை ஆப் ஆக்குகிறான்.
அடுத்து சுடரின் அப்பா சுப்பிரமணியம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவரை பார்க்கிறார். இதை பார்த்ததும் அவருக்கு தனது மனைவி முதல் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது, அந்த பெண்ணிடம் பேச ஓட அவர் மிஸ்ஸாகி விடுகிறார். வீட்டில் அஞ்சலி என் பிறந்த நாளை கொண்டாடவே இல்ல, அப்ப தான் எனக்கு உடம்பு முடியாமல் போய்டுச்சு என்று வருத்தப்பட சுடர் கேக்குடன் கிப்ட்டையும் கொண்டு வந்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய அஞ்சலி சுடரை கட்டி பிடித்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி!