Sheetal : எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல... பப்லு உடனான உறவை பாதியில் முறித்துக்கொண்டது ஏன்? ஷீத்தல் விளக்கம்

First Published Mar 18, 2024, 9:26 AM IST

23 வயதாகும் ஷீத்தலை காதலித்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்த நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.

Babloo prithveeraj, sheetal

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பப்லு பிருத்விராஜ். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி பிட்னஸிலும் அதீத கவனம் செலுத்தும் பப்லு, 56 வயதிலும் தன்னுடைய உடலை செம்ம பிட்டாக வைத்திருக்கிறார். இவரை பார்த்தால் 56 வயது என சொல்ல முடியாது அந்த அளவுக்கு இளமையுடனும் இருக்கிறார். இவருக்கு பீனா என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார்.

Babloo prithveeraj

பீனா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் பப்லு. அதேபோல் இவரது மகனுக்கு 25 வயது ஆகிறது, அவருக்கு ஆர்டிசம் பாதிப்பும் உள்ளது. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தனது 56 வயதில் ஷீத்தல் என்கிற 23 வயது மலேசிய பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, இருவரும் தாங்கள் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... ஷீத்தலுக்காக 1 லட்சம்.. ஹோட்டலில் உல்லாசம்.. நீயெல்லாம் என்னை கேள்வி கேட்கலாமா? பப்லுவை விளாசும் பயில்வான்!

Sheetal

பின்னர் இருவரும் ஜோடியாக யூடியூப்பில் வீடியோ போடுவது, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது என சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஜோடியாக வலம் வந்தனர். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் பப்லு பிருத்விராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஷீத்தல். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் அரசல் புரசலாக வெளிவந்தன.

Babloo prithveeraj and Sheetal break up

பின்னர் பேட்டிகளில் ஷீத்தல் உடனான பிரிவை உறுதிப்படுத்திய பப்லு அதற்காக விளக்கத்தை கொடுக்கவில்லை இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்த ஷீத்தல் தற்போது முதன்முறையாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பப்லு உடனான பிரிவு குறித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

sheetal Insta Story

அதில், “எனது கடந்த கால வாழ்க்கை பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். பிருத்வியும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது அனைவருக்கு தெரியும். நாங்கள் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தோம். நாங்க நினைத்தபடி எங்களது உறவு இருக்கவில்லை. அதனால் தற்போது நாங்கள் பிரிந்திருக்கிறோம். இதனை கடந்து செல்ல வேண்டிய நேரம் இது. அதனால் எங்கள் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  KPY Bala : சைக்கிள் கூட இல்லாம கஷ்டப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா

click me!