விஜய் டிவியில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சன் டிவி சீரியல்களுக்கே சவால்விடும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை உடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பள்ளி மாணவியாக இந்த சீரியலில் அறிமுகமானார். தற்போது கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது பதிரனா உடனான காதல் வதந்தி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நேஹா. அதன்படி அவர் கூறியதாவது : “எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை. ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அருகில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தான் பதிரனா பற்றி என்னிடம் கூறினார். அவர் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை நானும் எனது ஸ்டோரியில் பதிவிட்டேன்.