சண்முகத்தை ஏமாற்றும் வைகுண்டம்.. பாண்டியம்மா காலை பதம் பார்த்த இசக்கி - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட்

First Published Feb 29, 2024, 3:56 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுத்து சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, இசக்கி எதுக்கு இதெல்லாம் என்று கேட்க எல்லாம் உன்னையும் ஷண்முகத்தையும் சேர்த்து வைக்க தான் இப்படி தான் பண்றேன், வேற எதுக்கும் இல்ல என்று சொல்ல அண்ணனை பார்க்க போகிறோம் என்று இசக்கி சந்தோசப்படுகிறாள். 

Zee Tamil Anna Serial

அதனை தொடர்ந்து வைகுண்டம் சிவபாலனை பார்க்க இசக்கியும் நீயும் எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டீங்க, ஆனால் அது நடக்காமல் போய்டுச்சே என்று வருத்தப்பட அவன் அதெல்லாம் எனக்கு கவலை இல்ல மாமா, இசக்கி என்னுடைய மதினி அவங்க சந்தோசமாக இருந்தா போதும் என்று சொல்கிறான்.

இதையும் படியுங்கள்... ரியா கழுத்தில் தாலிகட்ட தடுமாறும் ஆனந்த்; சுமங்கலி பூஜையில் நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Anna Serial Update

இதனை தொடர்ந்து இங்கே வீட்டில் வைகுண்டம் நாளைக்கு கோவிலுக்கு போகணும், மாலை போட்டு பாத யாத்திரையா கோவிலுக்கு போக போறேன் என்று சொல்லும் போதே தடுமாற சண்முகத்துக்கு சின்னதா சந்தேகம் வருகிறது. 

இதனை தொடர்ந்து இங்கே பாண்டியம்மா இசக்கியை கூப்பிட்டு காலை அமுக்க சொல்ல அவளும் அமைதியாக காலை அமுக்கி விட்டு கொண்டிருக்கிறாள், பாண்டியம்மா உங்க அம்மா ஒடுக்காளி தானே என்று சொன்னதும் கடுப்பாகி பாண்டியம்மா காலை பிடித்து முறித்து விடுகிறாள். 

Anna Serial Today Episode

இதனை தொடர்ந்து மறுநாள் பாக்கியம் எல்லாரையும் கூப்பிட்டு கொண்டு கோவிலுக்கு வந்து விடுகிறாள். இங்கே ஷண்முகம் குடும்பமும் கோவிலுக்கு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களா? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... கைவிரித்த Doctors; மகனின் உயிரை காப்பாற்றிய வைத்தியருக்கு 10 கோடியில் மருத்துவமனை கட்டிக்கொடுத்த நெப்போலியன்

click me!