Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுத்து சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, இசக்கி எதுக்கு இதெல்லாம் என்று கேட்க எல்லாம் உன்னையும் ஷண்முகத்தையும் சேர்த்து வைக்க தான் இப்படி தான் பண்றேன், வேற எதுக்கும் இல்ல என்று சொல்ல அண்ணனை பார்க்க போகிறோம் என்று இசக்கி சந்தோசப்படுகிறாள்.
Anna Serial Update
இதனை தொடர்ந்து இங்கே வீட்டில் வைகுண்டம் நாளைக்கு கோவிலுக்கு போகணும், மாலை போட்டு பாத யாத்திரையா கோவிலுக்கு போக போறேன் என்று சொல்லும் போதே தடுமாற சண்முகத்துக்கு சின்னதா சந்தேகம் வருகிறது.
இதனை தொடர்ந்து இங்கே பாண்டியம்மா இசக்கியை கூப்பிட்டு காலை அமுக்க சொல்ல அவளும் அமைதியாக காலை அமுக்கி விட்டு கொண்டிருக்கிறாள், பாண்டியம்மா உங்க அம்மா ஒடுக்காளி தானே என்று சொன்னதும் கடுப்பாகி பாண்டியம்மா காலை பிடித்து முறித்து விடுகிறாள்.