Anna Serial
அதாவது கனி இப்படி பேசி விட்டு அங்கிருந்து கிளம்ப ஷண்முகமும் பரணியும் ஒளிந்து கொள்கின்றனர். கனி சென்ற பிறகு உள்ளே வரும் பரணி சௌந்தரபாண்டியை பார்த்து ஒரு குடும்பத்தை பிரிக்க நினைக்கறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று திட்டுகிறாள்.
Anna Serial
அடுத்ததாக வீட்டுற்கு வந்த கனி எதுவுமே நடக்காதது போல இருக்க ஷண்முகம் சாப்பிட்டியா என்று கேக்க கனி இல்லை என்று சொல்ல அவனே அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு பாசத்தை பொழிந்து கவனித்து கொள்கிறான். கனி எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் இருக்கிறாள். அதனால் நமக்கும் எதுவும் தெரியாதது போலவே இருக்கட்டும் என்று முடிவெடுக்கின்றனர்.
Anna serial
இதனையடுத்து ஷண்முகம் கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது ஒரு நபர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்ல ஷண்முகம் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறான், என் பொண்டாட்டி என்னை விட்டு பிரிந்து போக போறா, அவ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் சாக போறேன் என்று சொல்ல ஷண்முகம் உங்க பிரச்னையை நான் சரி பண்ணி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
Anna serial
இந்த நேரத்தில் அங்கு வரும் முத்துப்பாண்டி இதை வைத்து கேஸ் போட பிளான் போட ஷண்முகத்துக்கும் அவனுக்கும் முட்டி கொள்ள கடைசியில் ஊர் மக்கள் பஞ்சாயத்தை கூட்டி பிரச்னையை தீர்க்க சொல்ல இதே பஞ்சாயத்தில் வைத்து சண்முகத்தை அவமானப்படுத்த பிளான் போடுகிறான் முத்துப்பாண்டி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Anna Serial: அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இது தான் காரணமாம்?