சௌந்தரபாண்டிக்கு விபூதி அடித்து... பள்ளி விழாவில் மாஸ் காட்டிய ஷண்முகம் - அண்ணா சீரியலில் வேறலெவல் ட்விஸ்ட்

First Published Apr 22, 2024, 4:12 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பள்ளி விழாவில் ரத்னா வரவேற்புரையாற்ற இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பள்ளி விழாவில் ரத்னா வரவேற்புரையாற்ற வைத்திருந்த பத்திரிக்கையில் சிறப்பு விருந்தினர் என சௌந்தரபாண்டி பெயரை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சௌந்தரபாண்டியும் முத்துப்பாண்டியும் என்னடி பாக்குற? சிறப்பு விருந்தினர் என்று உன் அண்ணன் பெயர் இருந்த இடத்தில் என் பெயர் இருக்கேனு பாக்குறியா? என்று அதிர்ச்சி கொடுக்க ரத்னா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள். 

Zee Tamil Anna serial

அடுத்ததாக சௌந்தரபாண்டி கேட்டின் அருகே 4 குர்காக்களை நிற்க வைத்து சண்முகத்தின் போட்டோவை கொடுத்து இவன் மட்டும் உள்ள வந்தா விடக்கூடாது என சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் சண்முகம் தனது வண்டியில் கோர்ட் சூட்டில் வந்து இறங்க கூர்காக்கள் கையில் தனது போட்டோவை இருப்பதை பார்த்து எதுக்கு இந்த போட்டோவை கையில வச்சுட்டு இருக்கீங்க என்று விசாரிக்கிறான். 

சார் நீங்க பாக்க பெரிய ஆள் மாதிரி இருக்கீங்க அதனால உங்ககிட்ட உண்மைய சொல்றோம், சௌந்தரபாண்டி சார் இவர் வந்த உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இவர்களை காவலுக்கு நிற்க வைத்து இருக்காரு என்று சொல்கின்றனர். ஓ கதை அப்படி போகுதா என்று சண்முகம் உள்ளே வருகிறான். 

இதையும் படியுங்கள்... அபிராமியுடன் கூட்டு சேரும் தீபா.. அம்பலமாகும் ரியா பற்றிய ரகசியங்கள் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Anna serial Update

நேராக மேடையில் சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டிக்கு நடுவே உட்கார, சண்முகத்தை அடையாளம் தெரியாமல் அவர்கள் பரணி அழைத்து வந்த டாக்டர் என நினைத்துக் கொள்கின்றனர். ரத்னா மட்டும் சண்முகத்தை பார்த்ததும் அடையாளம் கண்டுபிடித்து சந்தோஷமடைய முத்துப்பாண்டி சோகமாய் இருந்தவ திடீர்னு சந்தோஷமாகி விட்டாள் என குழப்பம் அடைகிறான். 

பிறகு சௌந்தரபாண்டி சண்முகம் ஒருத்தனை சிறப்பு விருந்தினரா கூப்பிட்டு இருந்தாங்க. அவன் வரது பிடிக்காமல் என் பொண்ணு ஒரு பெரிய டாக்டர் உங்கள சிறப்பு விருந்தினரா கூப்பிட்டு வந்திருக்கா, அப்போ அவ அப்பனான நான் அந்த சண்முகம் வரக்கூடாதுன்னு நினைக்கிறது தப்பில்லையே என்று பேசுகிறான். மேலும் நீங்களே முன்னாடி இருந்து தலைமை தாங்கி இந்த நிகழ்ச்சியை நடத்தி வைங்க என்றும் சொல்கிறான். 

Anna serial Today Episode

அதன் பிறகு சிறப்பு விருந்தினர் என ரத்னா சண்முகத்தின் பெயரில் சொல்ல சௌந்தரபாண்டியும் முத்துப்பாண்டியும் குழப்பம் அடைய கோட்டு சூட்டுல் இருந்த ஷண்முகம் எழுந்து சென்று இங்கிலீஷில் பேசி அனைவரையும் வரவேற்று ஆச்சரியப்படுத்துகிறான். இதையெல்லாம் பார்த்த சௌந்தரபாண்டி மூக்கறுந்தது போல் முழிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க. 

இதையும் படியுங்கள்... Pasi Durai : 2 தேசிய விருதுகளை வென்றவர்... இயக்குனர் ‘பசி’ துரை காலமானார் - சோகத்தில் திரையுலகம்

click me!