அதாவது, ஷண்முகம் தன்னை பிடிக்க வருபவர்களை அடிக்க இசக்கி யாராவது கையை பிடிங்க வீட்டில் விட்டுடலாம் என்று உதவிக்கு கூப்பிட யாரும் வர மறுக்கின்றனர். இதனை தொடர்ந்து இசக்கியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பாண்டி வாடி வீட்டுக்கு போகலாம் என்று இசக்கியை கூப்பிட அவள் வர மறுக்கிறாள்.
முத்துப்பாண்டி இனிமே உன் அண்ணன் வீட்டிற்கு போற வேலையெல்லாம் வச்சிக்க கூடாது என்று மிரட்ட பாக்கியம் ஏன் டா போக கூடாது என்று இசக்கிக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். மறுபக்கம் பரணி, ரத்னா, வீரா ஆகியோர் சண்முகத்தை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்து தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுகின்றனர்.
Anna serial
உடனே பரணி நேத்து நைட்டே அவன் இசக்கி இசக்கினு புலம்பிட்டு இருந்தான், நான் தான் ஊசி போட்டு தூங்க வைத்தேன், இன்னைக்கும் அதே மனநிலையோட இருந்திருப்பான். சரக்கு கிடைக்கவே குடிச்சிருக்கான் என்று சொல்லி ஷண்முகத்திற்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை காண தவறாதீர்கள்.