Anna Serial: இசக்கியை மிரட்டி பணிய வைத்த முத்துப்பாண்டி.! பாக்கியம் கொடுத்த பதிலடி - அண்ணா சீரியல் அப்டேட்!

First Published Feb 21, 2024, 4:44 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குடி போதையில் ரோட்டில் விழுந்து கிடக்க இதை பார்த்து இசக்கி பதறிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, ஷண்முகம் தன்னை பிடிக்க வருபவர்களை அடிக்க இசக்கி யாராவது கையை பிடிங்க வீட்டில் விட்டுடலாம் என்று உதவிக்கு கூப்பிட யாரும் வர மறுக்கின்றனர். இதனை தொடர்ந்து இசக்கியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பாண்டி வாடி வீட்டுக்கு போகலாம் என்று இசக்கியை கூப்பிட அவள் வர மறுக்கிறாள். 

இதனால் முத்துப்பாண்டி பக்கத்தில் இருக்கும் கல்லை தூக்கி சண்முகத்தின் நெஞ்சில் கால் வைத்து வரலைனா உன் அண்ணன் மேலையே போட்டு கொன்னுடுவேன் என்று மிரட்ட இசக்கி பயந்து கொண்டு முத்துபாண்டியுடன் சென்று விடுகிறாள். வீட்டிற்கு வந்ததும் இசக்கி ஷண்முகம் குடித்து விழுந்து கிடக்கும் விஷயத்தை சொல்ல பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள். 

Karthigai Deepam: பாராட்டு மழையில் கார்த்திக்! பயத்தில் பதறும் அபிராமி.! என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

முத்துப்பாண்டி இனிமே உன் அண்ணன் வீட்டிற்கு போற வேலையெல்லாம் வச்சிக்க கூடாது என்று மிரட்ட பாக்கியம் ஏன் டா போக கூடாது என்று இசக்கிக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். மறுபக்கம் பரணி, ரத்னா, வீரா ஆகியோர் சண்முகத்தை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்து தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுகின்றனர். 

இங்கே பாக்கியம் பேசியதை கேட்டு பாண்டியம்மா இசக்கியை அடிக்க வர பாக்கியம் கையை பிடித்து அவ என் மருமகள், அவளுக்கு துணையா நான் இருக்கேன், அவ மேல கையை வைக்கிற உரிமை உங்களுக்கு இல்ல என்று பதிலடி கொடுத்து கூட்டி செல்கிறாள். அதனை தொடர்ந்து வைகுண்டமும் ஷண்முகமும் இதுவரைக்கும் குடிக்காத ஷண்முகம் இப்படி குடிச்சிட்டு வந்து மானத்தை வாங்கிட்டானே என்று வருத்தப்படுகின்றனர். 

Anirudh : பாலிவுட் திரையுகை இசையால் அசர வைத்த அனிருத்! முதல் இந்தி படத்திற்கே கிடைத்த மிக உயரிய விருது!
 

Anna serial

உடனே பரணி நேத்து நைட்டே அவன் இசக்கி இசக்கினு புலம்பிட்டு இருந்தான், நான் தான் ஊசி போட்டு தூங்க வைத்தேன், இன்னைக்கும் அதே மனநிலையோட இருந்திருப்பான். சரக்கு கிடைக்கவே குடிச்சிருக்கான் என்று சொல்லி ஷண்முகத்திற்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து  நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை காண தவறாதீர்கள்.
 

click me!