சினிமா பிரபலங்கள் இடையே காதல் திருமணங்கள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதோ, அதே அளவு விவாகரத்தும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் நடந்துள்ளன. குறிப்பாக திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து என்றால் அது சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் விவாகரத்து தான். அவர்கள் இருவரும் கடந்த 2017- ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இது காதல் திருமணமாக இருந்தாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவாவில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தினர்.
இந்த நிலையில், விவாகரத்துக்கு பின்னரும் தன்னுடைய திருமண ஆடையை நடிகை சமந்தா மீண்டும் பயன்படுத்தி இருக்கும் சம்பவம் இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. சமந்தா தன்னுடைய திருமணத்திற்காக ஆசை ஆசையாக வாங்கி அணிருந்திருந்த வெள்ளை நிற கவுனை தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு டோட்டலாக மாற்றி மறுபடியும் பயன்படுத்தி இருக்கிறார். விருது விழாவுக்கு அந்த மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஆடையை அவர் அணிந்து வந்திருந்தார்.
இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் போட்டிருக்கிறார். அதில், எனக்கு பிடித்த இந்த கவுனை மறுவடிவமைப்பு செய்து பயன்படுத்தினேன். அதை மீண்டும் அழகாக்கிய கிருஷ் பஜாஜுக்கு நன்றி. பழைய ஆடைகளை மறுவடிவமைப்பு செய்வது மிகவும் நிலையான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சமந்தா.
இதையும் படியுங்கள்... Siragadikka Aasai : ஒரே நேரத்தில் 4 மொழிகளில் ரீமேக்.. பான் இந்தியா அளவில் மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை சீரியல்