டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.
பின்னர் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகைகள் வழக்கமாக பாலோ பண்ணும் யுக்தியான கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தினார் ரம்யா பாண்டியன். அதில் கொஞ்சம் வித்தியாசமாக மொட்டை மாடியில் காட்டன் சேலையில் கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார்.
ரம்யா பாண்டியனின் மொட்டைமாடி போட்டோஷூட் அவரை பாப்புலர் ஆக்கியது. இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு வராவிட்டாலும் சின்னத்திரையில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ரம்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், அதில் இறுதிப்போட்டிவரை முன்னேறினாலும் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.
அந்த வகையில், கோலிவுட்டில் சூர்யா தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில், தற்போது ஹோலி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். மஞ்சள் நிற லெஹங்கா உடை அணிந்து, கையில் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.