Nayanthara: உயிர் - உலகம் இருவரையும் மார்பில் சாய்த்துக்கொண்டு... தாய் பாசத்தை பொழியும் நயன்தாராவின் போட்டோஸ்!

First Published Mar 26, 2024, 1:47 PM IST

நடிகை நயன்தாரா, தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மலையாள பைங்கிளியான நடிகை நயன்தாரா... ஆரம்பத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் நடிகையாக மாறியவர். மானசினாக்கரே, படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து சில மலையாள பட வாய்ப்புகளை கைப்பற்றிய இவருக்கு, இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால் அது தமிழ் படங்கள்தான்.
 

நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் அழகு தேவதையாக தோன்றிய நயன், இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'கஜினி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய நயன், நடிகர் சிம்புவுடன் 'வல்லவன்' படத்தில் நடிக்கும் போது... அவருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

Siragadikka Aasai: அடடா முத்து பிரச்சனை பண்ணுவாருனு பார்த்தா.. விஜயா முத்திக்கொண்டாரே? சிறகடிக்க ஆசை அப்டேட்!

உருகி... உருகி... இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது லிப் லாக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பின்னர், சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். இந்த காதல் சர்ச்சைக்கு பின்னர் நயன்தாராவின் சினிமா கேரியர் சூடு பிடிக்க துவங்கியது. குறிப்பாக நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்த 'பில்லா' அவருடைய திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட நயன்தாரா... 'வில்லு' படத்திற்கு டான்ஸ் அமைத்த நடன இயக்குனர், பிரபுதேவா காதல் வலையில் விழுந்தார். திருமணம் வரை இவர்களின் காதல் உறவு சென்ற நிலையில், பின்னர் பிரிந்தனர். பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின்னர், சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்த நயன், இயக்குனர் அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில் கம் பேக் கொடுத்தார்.

சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது மகன் அச்சு அசல் இவரோட Xerox தான்! குடும்பத்தோடு ஹோலி கொண்டாடிய போட்டோ வைரல்!
 

இப்படத்தின் வெற்றி நயன்தாராவை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டுவந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கிய நயன்.. ஒருவழியாக அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணமான 4 மாதத்தில் சரகேசி முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன், குடும்பம், குழந்தை, கேரியர் என மூன்றையும் சாமர்த்தியமாக நிர்வகித்து வருகிறார்.

தற்போது 'ஜவான்' படத்தின் மூலம் ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ள நயன்... அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களில் நடிக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது தவிர தமிழில் மண்ணாங்கட்டி, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

Indian Movie: 'இந்தியன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோயின் இவங்க தான்!

அதே போல் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து, நாப்கின், ஸ்டாட்டர், லிப் பாம், பர்பியூம், என பல பிஸ்னஸ் செய்து வருகிறார். இந்நிலையில் விக்கி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு சென்று வீடு திரும்புகிறேன் என கூறி... உயிர் - உலகத்தை பார்க்க போகிறேன் என கூறி சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
 

ஒரு புகைப்படத்தில் தன்னுடைய இரட்டை குழந்தைகளை விக்கி கொஞ்சும் நிலையில், மற்ற இரண்டு புகைப்படத்தில் நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை கொஞ்சி கொண்டும், மார்போடு அணைத்த படி பாசமழை பொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indraja Sankar Wedding: மாமாவையே காதலித்து கரம் பிடித்த ரோபோ ஷங்கர் மகள்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

click me!