மலையாள பைங்கிளியான நடிகை நயன்தாரா... ஆரம்பத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் நடிகையாக மாறியவர். மானசினாக்கரே, படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து சில மலையாள பட வாய்ப்புகளை கைப்பற்றிய இவருக்கு, இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால் அது தமிழ் படங்கள்தான்.
நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் அழகு தேவதையாக தோன்றிய நயன், இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'கஜினி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய நயன், நடிகர் சிம்புவுடன் 'வல்லவன்' படத்தில் நடிக்கும் போது... அவருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
Siragadikka Aasai: அடடா முத்து பிரச்சனை பண்ணுவாருனு பார்த்தா.. விஜயா முத்திக்கொண்டாரே? சிறகடிக்க ஆசை அப்டேட்!
உருகி... உருகி... இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது லிப் லாக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பின்னர், சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். இந்த காதல் சர்ச்சைக்கு பின்னர் நயன்தாராவின் சினிமா கேரியர் சூடு பிடிக்க துவங்கியது. குறிப்பாக நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்த 'பில்லா' அவருடைய திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இப்படத்தின் வெற்றி நயன்தாராவை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டுவந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கிய நயன்.. ஒருவழியாக அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணமான 4 மாதத்தில் சரகேசி முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன், குடும்பம், குழந்தை, கேரியர் என மூன்றையும் சாமர்த்தியமாக நிர்வகித்து வருகிறார்.
அதே போல் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து, நாப்கின், ஸ்டாட்டர், லிப் பாம், பர்பியூம், என பல பிஸ்னஸ் செய்து வருகிறார். இந்நிலையில் விக்கி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு சென்று வீடு திரும்புகிறேன் என கூறி... உயிர் - உலகத்தை பார்க்க போகிறேன் என கூறி சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.