வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும், அதை ஒரு தடையாய் நினைத்து சோர்ந்து விடாமல் தொடர்ந்து தன்னுடைய இலக்கை நோக்கி ஓடி வெற்றிபெறுபவர்கள் ஒரு சிலரே... அப்படி தன்னுடைய வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து, பல கஷ்டங்களை கடந்து சாதித்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடுவதிலும் தீவிரம் காட்டிய இவருக்கு, குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் அப்போது இருந்தது. எனினும் தன்னுடைய முயற்சியை தளர்த்தி கொள்ளாமல் போராடிய இவருக்கு, 2010 ஆம் ஆண்டு 'நீதான அவன்' என்கிற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இதே மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும், அசராமல் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு... அட்டகத்தி திரைப்படம் நல்ல துவக்கமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் கைவசம், மூன்று தமிழ் படங்கள் உட்பட இரண்டு மலையாள படங்கள் உள்ளன.