முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்... பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான, அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தூம் 2 படத்தில் நடிக்கும் போது இவர்கள் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதை தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2007-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மனதிற்கு பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்தார். அவர் கூறியது போலவே... பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பல்வேறு ஃபேஷன் நிகழ்ச்சிகளில் தன்னுடைய கணவருடன் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று, உமர் சந்து ட்வீட் செய்துள்ளார். இது தவிர, சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவில்லை என்றும் வதந்திகளும் உள்ளன.
இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும், அவர்கள் பிரிந்து செல்ல தயாராகி வருவதாகவும் கூறுகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. தற்போது அபிஷேக் பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D