1990-களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜனின் மகனான இவர், நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனதால் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் விஜய், அஜித்துக்கு நிகராக அந்த சமயத்தில் கொண்டாடப்பட்ட இவருக்கு திருமணமான பின்னர் சினிமாவில் மார்க்கெட் போனது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டே விலகி இருந்தார் பிரசாந்த்.
2018-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த பிரசாந்த், தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிரசாந்துக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அவர் கைவசம் அந்தகன் என்கிற திரைப்படமும் உள்ளது. இது இந்தியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... CWC 5 : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... குக் வித் கோமாளியில் போட்டியாளராக களமிறங்கும் டிடிஎப் வாசனின் காதலி...!
நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது பற்றி அவரின் தந்தை தியாகராஜன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். நல்ல குடும்பத்தில் இருந்த வந்த பெண்ணை தான் பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது, திருமண பதிவு அலுவலகத்தின் மூலம் எங்களுக்கு தெரியவந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கல்யாணமான ஒன்றரை மாதத்திலேயே அந்த பொண்ணு வீட்ட விட்டு போயிடுச்சு.