சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். முதலில் குண்டான தோற்றத்துடன் சைடு ரோலில் நடிக்க சீரியலில் நடிக்க எண்ட்ரி கொடுத்த இவர், பின்னர் ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறிய உடன் அதே சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திய ஷிவானிக்கு, பிக்பாஸ் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
அந்த வகையில் ஷிவானி சினிமாவில் நடிகையாக அறிமுகமான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி. சின்ன ரோலில் நடித்தாலும் ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார்.
இதன்பின் பம்பர் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆனார் ஷிவானி. இப்படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷிவானி. தமிழ் சினிமாவில் அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதுதவிர ஏராளமான படங்களை கைவசம் வைத்து பிசியான ஹீரோயினாக வலம் வரும் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கிலான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வபோது கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவார்.