தளபதி விஜய்யிடம் அவரது மாமனார் பழைய பிரச்னையை தூசி தட்டி சமரசம் செய்ய பேச்சு வார்த்தை நடக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
26
சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டிய 80-வது பிறந்தநாளை கூட மிகவும் எளிமையாக மனைவியுடன் மட்டுமே கொண்டாடிய எஸ்.ஏ.சி...80-வது மணிவிழாவையும் தனியாகவே திருக்கடையூரில் நடத்தி கொண்டார். மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் இருந்தும் இவர்கள் யாரும் இல்லாதது போல் தன்னந்தனியாக அமர்ந்து பூஜைகள் செய்தது ரசிகர்களையே மிகவும் வருத்தமடைய செய்தது.
தந்தை - மகனுக்கு இடையே இப்படி ஒரு திடீர் பிளவு ஏற்பட காரணம், விஜய்க்கு துளியும் இஷ்டம் இல்லாத செயல்களை தன் பெயரை பயன்படுத்தி அவரது தந்தை செய்தது தான். இது வழக்கு தொடரும் அளவில் கூட சென்றது. என்ன தான் தந்தையிடம் கடுமையாக விஜய் நடந்து கொண்டாலும் அம்மா மீதுள்ள அன்பு எப்போதும் மாறியது இல்லை.
46
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவை வீட்டிற்கு வர வழைத்து பார்ப்பது, அம்மாவுக்கு தேவையான அனைத்தையும் செய்வது என ஒரு சிறந்த மகனாகவே நடந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அப்பா - மகன் இடையே உள்ள கருத்து வேறுபாடை பேசி தீர்ப்பதற்கான பஞ்சாயத்து தான் லண்டனில் உள்ள விஜய்யின் மாமனார் வீட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அம்மா, கேட்டுக்கொண்டதற்காக இதற்க்கு விஜய்யின் மாமனாரும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
66
'விஜய்' வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், அமெரிக்கா சென்று தன்னுடைய மகனை பார்த்து விட்டு, பின்னர் குடும்பத்துடன் லண்டன் செல்ல உள்ளார். அப்போது தான் இந்த பஞ்சாயத்து நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வெளியாகியுள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.