உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 16 போட்டியாளர்களுடன் அமோகமாக நேற்று ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. இன்று முதல் அனைவரும் தங்களுடைய போட்டிக்கு தயாராகி உள்ளனர். முதல் வாரத்தில் வெளியேற போவது யார்? முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்குமா? இருக்காதா என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
undefined
இந்நிலையில் இன்று, உங்கள் இதயத்தை உடைத்த போட்டியாளர் யார் என்றும், அவர்கள் கையில் இதயம் போன்ற ஒரு முத்திரையை மற்ற போட்டியாளர்கள் வைக்க வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.
undefined
இதில் காலையில் தளபதியை பாட்டுக்கு செம்ம கூலாக ஆட்டம் போட்ட, ஷிவானியை மற்ற சில போட்டியாளர்கள் ஓரம் கட்டப்படும் காட்சிகள் உள்ளன. முதலில் சம்யுக்தா ஷிவானி பெயரை கூறி அவர் கையில் ஹார்ட் முத்திரையை வைக்கிறார். அதை தொடர்ந்து வரும் சனம் ஷெட்டியும், ஷிவானியின் பெயரை கூறுகிறார்.
undefined
அவர் யாருடனும் மிங்கில் ஆகாமல் தனியாக இருப்பது போன்று தோன்றுவதாக கூறுகிறார். இதை தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்தியும் ஏன்? முகத்தை சோகமாக வைத்து கொண்டு இப்படி இருக்கிறீர்கள் என கேட்கிறார்.
undefined
இதற்கு ஷிவானி தனக்கு மிங்கில் ஆக டைம் எடுக்கும் என கூறும்போது, நேற்று ஒரு நிமிடத்தில் என்னுடன் பேசுனீர்கள் என பதில் கொடுக்கிறார்.
undefined
இதை தொடர்ந்து சனம் ஷெட்டி, ஷிவானியின் வயது குறைவு என்பதால் அவருக்கு மெச்சூரிட்டி இல்லை என்பது போல் பேச, இதற்க்கு ஷிவானி நான் பேசணும், ஆன இங்கு தனக்கு உரிமை இல்லை என்றால் நான் பேசவில்லை என கண் கலங்கியது போல் கூறுகிறார்...
undefined