ஊழியரை 2 நாட்கள் குடோனில் வைத்து கேஜிஎப் விக்கி செய்த காரியம்! தலைமறைவாக இருந்தவரை தொக்காக தூக்கிய போலீஸ்!

First Published May 4, 2024, 11:18 AM IST

குடோனில் அடைத்து வைத்து ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டுள்ளார். 

KGF Vicky

சென்னை வண்ணாரப்பேட்டை என். என். கார்டன் மூன்றாவது தெருவில் விக்கி என்ற விக்னேஸ்வரன் கேஜிஎப் என்ற பெயரில் துணிக்கடை கடை நடத்தி வருகிறார். அடிக்கடி குற்ற வழக்குகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர் ரூ.1 லட்சம் கையாடல் செய்து தலைமறைவாகி, மீண்டும் அவர் வேலை கேட்டு வந்துள்ளார். 

Police Case Register

அப்போது விக்கி ஷோரூம் குடோனில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து அடியாள் வைத்து இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ஊழியர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்கியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். 

இதையும் படிங்க: கல்யாணம் ஆன 10 நாளிலேயே என் பொண்ண கொன்னுட்டாங்களே? கதறும் பெற்றோர்.. நடந்தது என்ன?

KGF Vicky Arrest

இந்நிலையில் விக்கி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து கேஜிஎஃப் விக்கி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!