கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் பிரம்மாண்ட திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதன் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் வேகமெடுத்து வருகின்றன. வழக்கமாக பிரபலமான படங்கள் ஏதேனும் ரிலீசானால் அதில் உள்ள நடிகர், நடிகைகள் அணிந்துள்ள ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்யப்படுவது என்பது சமீபத்திய டிரெண்டாக உள்ளது.