அச்சம் என்பது மடமையடா
விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு காதல் படத்தை கொடுத்துவிட்டு, இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு வந்த குட் நியூஸ் தான் அச்சம் என்பது மடமையடா. சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் இது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முழுக்க முழுக்க காதல் படமாக எடுத்த கவுதம் மேனன், அச்சம் என்பது மடமையடா படத்தில் சற்று ரூட்டை மாற்றி காதலில் தொடங்கும் இப்படத்தை ஆக்ஷன் பக்கமும் நகர்த்தி சென்றிருந்தார். இப்படத்திலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருந்தன. அதிலும் சிம்புவும் மஞ்சிமாவும் விபத்தில் சிக்கும்போது காதலை வெளிப்படுத்தும் படியான காட்சியமைத்து கைதட்டல்களை பெற்றார் கவுதம் மேனன்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்னர் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காமல் தவித்து வந்த சிம்புவுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தாலும், விண்ணைத்தாண்டி வருவாயா அளவுக்கு இப்படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதையும் படியுங்கள்... மாநாடு பட வசூல் சாதனைகளை முறியடித்து.. பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்த வெந்து தணிந்தது காடு - முதல் நாள் வசூல் இதோ