தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர் (Parvathy Nair).
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் (Nimir) போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார் பார்வதி நாயர் (Parvathy Nair).
இவர் எந்த அளவிற்கு இறங்கி கவர்ச்சியை வாரி இறைத்தாலும் , பாவம் இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
தற்போது இவர் கைவசம் ஆலம்பனா மற்றும் ரூபம் (Roobam) ஆகிய படங்கள் உள்ளன. இந்த 2 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இதையடுத்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தற்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதலங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் பார்வதி.