மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

By Raghupati RFirst Published Jan 21, 2023, 3:54 PM IST
Highlights

மும்பையில் மனநிலை சரியில்லாத சிறுமியை 3 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையின் காட்கோபர் பகுதியில் மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை வலுக்கட்டாயமாக கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அது சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய வீடியோவை சிறுமியின் சகோதரர் பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். காட்கோபர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதே போல மற்றொரு சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது. பக்கத்து வீட்டுக்காரரால் மைனர் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவரது தாயார் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

உபியில் உள்ள தியோரானியா கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைனர் பெண் தனியாக இருந்தபோது, அவரது 42 வயதான பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது வெளியே தெரிந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்

click me!