உலக சுகாதார அமைப்பான WHO கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றியுள்ளது.

அதிக ஆபத்துள்ள மக்கள் தங்கள் கடைசி பூஸ்டருக்கு 12 மாதங்களுக்குப் பிறகு கூடுதல் அளவைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக சுகாதார நிறுவனம் அதிக ஆபத்துள்ள மக்கள்தொகையை வயது முதிர்ந்தவர்கள் என்றும், மற்ற குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள் இளையவர்கள் என்றும் வரையறுத்துள்ளது. வயது மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு போன்ற காரணிகளின் அடிப்படையில், சமீபத்திய டோஸுக்கு 6 அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியின் கூடுதல் ஷாட்டை பரிந்துரைக்கிறது.

தடுப்பூசி பரிந்துரைக்கும் முன் மற்ற நோய் குறித்த காரணிகளைக் கருத்தில் கொள்ளுமாறு நாடுகளை வலியுறுத்தி உள்ளது. யுனைடெட் கிங்டம் மற்றும் கனடா போன்ற சில உயர் வருமானம் கொண்ட நாடுகள் ஏற்கனவே அதிக ஆபத்துள்ளவர்களுக்கு கோவிட் 19 (COVID-19) பூஸ்டர்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

இதையும் படிங்க..300 மில்லியன் வேலைகளை பறிக்கும் ஜெனரேட்டிவ் AI.. கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்