பிரதமர் மோடி ரஷ்யாவுடன் உறவை வலுப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்காவும் இந்தியாவை ஒரு முக்கிய கூட்டாளியாக அறிவித்துள்ளது. இரு உலக சக்திகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்து, உலக அரசியலில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் சதுரங்க ஆட்டம்

அரசியல் மேடையில் நடக்கும் இயக்கங்கள் பல நேரங்களில் சதுரங்க ஆட்டத்தைப் போன்றவை. ஒரு அடி போட்டாலே உலக சக்திகளின் கண் திரும்பும். சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் அதற்கு உதாரணம். ரஷ்யா – இந்தியா உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்து உரையாடினார்கள். இருவரும் இணைந்து இந்திய பாரம்பரிய ராஜவிருந்தை பரிமாறிக்கொண்ட காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலானபோது, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பதற்றம் தோன்றியதோ உண்மை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக அரசியலில் இந்தியா இன்று மிகப்பெரிய முடிவு இயந்திரம். யாருடன் நின்றாலும் அந்த தராசு அங்கு சாயும். இதுவே அமெரிக்காவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதனால் தான்—சீனாவுக்கு எதிரான பொருளாதார-பாதுகாப்பு சமநிலையில் இந்தியா மிகப் பெரிய பங்கு வகிப்பதை உணர்ந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இந்தியா எங்கள் முக்கிய மூத்த கூட்டாளி” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது பெரிய அரசியல் செய்தி.

இது வெறும் நட்பு அறிவிப்பு அல்ல; வர்த்தகம், இராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு உடன்படிக்கை, எதிர் பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து செயல்பட துவக்க மணி முழங்கிய தருணம். அமெரிக்கா – இந்தியா இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தால் அது உலக அரசியல் தராசில் பெரிய மாறுதல்களை உருவாக்கும்.

ரஷ்யாவுடனும் கை கோர்த்து, அமெரிக்காவுடனும் தோள் கொடுத்து நடக்கும் இந்தியா இன்று இரு சக்திகளுக்கும் பொதுவான அவசியம். அதுவே மேடையில் இந்தியாவின் உயரத்தை நிரூபிக்கிறது. மோடி–புதின் பாயாசம் கையில் புன்னகையுடன் பகிர்ந்தபோது, அமெரிக்கா தன் பக்கமும் உறுதி செய்துவிட்டது—இந்தியா இனி சாதாரண நாடு அல்ல, உலகம் கணக்கில் கொள்ள வேண்டிய சக்தி.