5 ஆயிரம் லியோன் காசு கொடுத்தால் இரண்டு நிமிடம் அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வேன்.  50,000 லியோன் காசுகள் கொடுத்தாள் என் உடல் முழுவதும் அன்று அவர்களுக்கு சொந்தம்.  இப்போது ஆணுறைகள் விலை அதிகமாகிவிட்டதால் உடலுறவுக்கான கட்டணத்தையும் உயர்த்தி கொண்டேன்.  எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள்.

உலகில் எந்த நாடுகளையும் விட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கிட்டத்தட்ட 3 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இங்குள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது என்ற ஆதாரத்துடன் ஆங்கில செய்தி ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அங்குள்ள பாலியல் தொழிலாளிகளை பேட்டி கண்டுள்ள அதன் செய்தியாளர் அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அத்தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அச்செய்தியாளர் விவரிக்கும் தகவல்கள் கேட்போரை அதிரவைக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர் பேட்டி கண்டுள்ள ஒரு பெண், " நான் பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்காவிட்டால் அன்று நானும் என் சகோதரிகளும் பட்டினிதான். என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் என்னை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் ஒரு நாள் முழுக்க என்னுடன் உறவு வைத்துவிட்டு எனக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மில்லியன் காசுகள் (இந்திய ரூபாய் மதிப்பில் 40 ரூபாய் பணம்) கொடுப்பார்கள் தனக்கு பாலியல் உணர்வு இல்லாவிட்டாலும்கூட அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது வேதனையானது. அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் நடந்தால் மட்டுமே அந்த 40 ரூபாயும் முழுவதுமாக கிடைக்கும் தினம் தினம் நரக வேதனை அனுபவிக்கும் நிலைமை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 16 பேர் என்னை மாறிமாறி வன்புணர்வு செய்துள்ளனர் என பகிர்க கிளப்புகிறார்.

அத்துடன், அவருடன் இருந்த மரியமா ஃபோபானா என்ற பெண் கூறும்போது, " நான் 14 வயதில் முதல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன், குடும்ப வறுமையின் காரணமாக எங்களை வளர்க்க முடியாமல் என் அம்மா எங்களை விரட்டிவிட்டார். கடைசியாக என்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட நபர் என்னுடன் உறவு வைத்துவிட்டு அதற்கு பணம் தராமல் ஓடிவிட்டான், அத்துடன் நான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தோடு என் கைபேசியையும் எடுத்துக்கொண்டு ஒடிவிட்டான் அவனுடன் சண்டை போட முயற்சித்தபோது எனது முகத்திலும், உடலிலும், கடுமையாக தாக்கி காயத்தை ஏற்படுத்தி விட்டான் " என்று தன் கண்ணில் ஏற்பட்டுள்ள தழும்பை காட்டுகிறார். 

அவரைத் தொடர்ந்து பேசும் மஸ்காரா என்ற பெண், "என்னை விரும்புகின்ற ஆண்கள் என்னை தனியே அழைத்துச் செல்வார்கள், ஒரு இரவில் ஏழு முதல் எட்டு பேர் என்னை மாறி மாறி உடலுறவு செய்வார்கள். 5 ஆயிரம் லியோன் காசு கொடுத்தால் இரண்டு நிமிடம் அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வேன். 50,000 லியோன் காசுகள் கொடுத்தாள் என் உடல் முழுவதும் அன்று அவர்களுக்கு சொந்தம். இப்போது ஆணுறைகள் விலை அதிகமாகிவிட்டதால் உடலுறவுக்கான கட்டணத்தையும் உயர்த்தி கொண்டேன். எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். நான் தான் அவர்களை வளர்க்க வேண்டும், நான் வெளியே சென்று சம்பாதித்து வந்தால்தால் அவர்கள் சாப்பிட முடியும். என்று அந்த பெண்கள் கூறுவதை உலகத்தின் நெஞ்சைப் படித்து உலுக்குகிறது.