Raffle Draw UAE : பிக் டிக்கெட் அபுதாபி நடத்திய ரேஃபிள் டிராவில் 037130 என்ற டிக்கெட்டை வைத்து ராஜீவ் என்ற அமீரக வாழ் இந்தியர் பெரும் பரிசைப் பெற்ற்றுள்ளார்.

பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் 15 மில்லியன் திர்ஹம்களை இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி வென்ற பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியரான ராஜீவ் அரிக்காட்டின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. கலீஜ் டைம்ஸ் என்ற அரபு நாட்டு நாளிதழ் அளித்த தகவலில், 260 என்ற ரேஃபிள் டிராவின் போது, ​​037130 என்ற வெற்றிச் சீட்டை ராஜீவ் பெற்றுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த மூன்று வருடங்களாக பிக் டிக்கெட் டிராக்களில் பங்கேற்று வரும் ராஜீவ், தற்போது அல் ஐனில் உள்ள கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது வீட்டில் தனது மனைவி மற்றும் ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவர் வெற்றி பெற்ற டிக்கெட்டில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதில் அவருடைய அன்புக்குரிய குழந்தைகளின் பிறந்தநாள் தேதி உள்ளது.

பாக். ஆட்சி அமைப்பது யார்? பெரும்பான்மை இல்லாமலே வெற்றியை அறிவித்த நவாஸ் ஷெரீப்!

அதிர்ஷ்டத்தின் திடீர் அலையில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கும் ராஜீவ், இந்த அதிர்ஷ்டத்தை கொண்டு இன்னும் எந்த திட்டங்களையும் வகுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதில் மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால், ராஜீவ் வென்ற இந்த பரிசு தொகையை 19 பேருக்கு சமமாகப் பிரித்து தனது அதிர்ஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பியுள்ளார் அவர். 

"நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அல் ஐனில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன். லாட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இந்த முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த தேதிகள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதே கலவையுடன் ஒரு விஸ்கர் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸை நான் தவறவிட்டேன். ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி," என்று ராஜீவ் ஜனவரி 11 அன்று அந்நாட்டு ஊடகங்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் தேர்தல்.. இம்ரான் கான் கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் - PTI கட்சி தலைவர் பாரிஸ்டர் கோஹர் அறிவிப்பு!