The Nobel Assembly at Karolinska Institutet has today decided to award the 2017 Nobel Prize in Physiology or Medicine

2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்கர்கள் 3 பேருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உடலின் உயிர்கடிகாரம் செயல்படும் விதம் பற்றி 3 விஞ்ஞானிகளும் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு யாருக்கு என இன்று அறிவிப்பு வெளியானது. இதில், அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஜ்பாஷ், மைக்கேல் யங் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மனித உடலில் உள்ள உயிர் கடிகாரம் எப்படி ஒழுங்கமைவோடு இயங்குகிறது என்றும், பூமியின் சுழற்ச்சிக்கு ஏற்றது போல் மனிதன், விலங்கு, கோள்களின் இயக்கம் எப்படி ஒத்திசைவோடு அமைகிறது என்றும் 3 பேரும் கண்டுபிடித்துள்ளனர். 

இதற்காக அவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோபல் பரிசுக்கான ரூ. 7 கோடியும் 3 பேருக்கும் பகிந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.