வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில், மேற்கு வர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையின் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

வெள்ளை மாளிகையிலிருந்து சில பிளாக்குகள் தூரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு, அமெரிக்காவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. புதன்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேற்கு வர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையின் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். சம்பவத்துக்குப் பிறகு FBI, ரகசிய சேவை மற்றும் மெட்ரோ காவல்துறை இணைந்து உயர் மீட்டல் விசாரணையைத் தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆபத்தான நிலையில் 2 வீரர்கள்

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறிவைத்து செய்யப்பட்டதா அல்லது வேறு பெரிய திட்டத்தின் பகுதியா என்பதை FBI தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. CPR மற்றும் அவசர உதவி அளிக்கப்பட்டவுடன், இரு வீரர்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாட்சிகள் கூறிய பதற்றமான தருணங்கள்

காரில் இருந்தபோது இரண்டு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக ஸ்டேசி வால்டர்ஸ் கூறினார். சில நொடிகளில் போலீசார், தீயணைப்பு பிரிவு, அவசர உதவி குழுக்கள் அங்கு குவிந்தன. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களில் CPR செய்யப்படுவது, காயமடைந்த வீரர்கள் பாதையில் படுத்திருப்பது போன்ற காட்சிகள் தெரிகின்றன.

தேசிய பாதுகாப்புப் படை நிறுத்தம்

கடந்த மாதங்களாகவே டிசியில் தேசிய பாதுகாப்பு படையை நிறுத்துவது அரசியல் சர்ச்சையாக இருந்தது. சிலர் பணியை நீட்டிக்க சம்மதித்த நிலையில், மத்திய நீதிமன்றம் படையை திரும்பப் பெற உத்தரவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் இந்த தாக்குதல், பாதுகாப்பு முடிவுகள் மீண்டும் கடுமையாக விவாதிக்கப்படத் தூண்டியுள்ளது.

நகரில் பாதுகாப்பு அதிகரிப்பு

தாக்குதல் நடத்தியவர் கடுமையான தண்டனை பெறுவார் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். துணைத் தலைவர் வென்ஸ், “வீரர்கள் நாட்டின் வாள் மற்றும் கேடயம்” என்று கூறியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, ATF, FBI, ரகசிய சேவை, பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து அந்த பகுதி முழுவதும் சீல் செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தனிப்பட்ட பகையா அல்லது பெரிய அச்சுறுத்தலின் ஒரு பகுதி என்பது விரைவில் வெளிச்சம் பார்க்கும். இச்சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.