பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அவர் நான்காவது குழந்தையை தன் வயிற்றில் சுமந்து வருவதாகவும் இதுக்குறித்து அவர் எலிசபெத் மகாராணி உயிரிழப்புக்கு முன்பே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: இந்தோனேசியாவில் 10 ஆண்டுகள் வரை வெளிநாட்டு பயணிகள் தங்கலாம்! புதிய சலுகை அறிவிப்பு

இளவரசி கேட் மிடில்டன் கடந்த 2 ஆண்டுகளாக மற்றொரு குழந்தையை பெற விரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் நான்காவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பது இளவரசர் வில்லியமை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு கிங் சார்லஸை சிலிர்ப்பில் அழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ரோமானிய காலம் முதல் ஓவியங்கள் அடங்கிய பாலம் வரை.. உலகின் மிகவும் பிரபலமான 10 பாலங்கள் பற்றி தெரியுமா ?

இதை அடுத்து அவர் தனது பேரக்குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக நம்பப்படுகிறது. கேட் மிடில்டனின் கர்ப்பத்தைப் பற்றி அறிந்த முதல் அரச குடும்ப உறுப்பினர்களில் மன்னர் சார்லஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.